இலங்கை கிரிக்கெட்டின் தீவிர ஆதரவாளர் ‘பெர்சி அபேசேகர’ காலமானார்!

Date:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை உற்சாகப்படுத்தும் மூத்த ஆதரவாளரான  பெர்சி அபேசேகர (87) இன்று கொழும்பில் காலமானார்.

பெர்சி அபேசேகர, உள்ளூர் மற்றும் சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவராக இருந்தவர்.

எதிரணி அணியின் வீரர்களுடன் இவர் நகைச்சுவையான கலந்துரையாடல்களை நடத்துபவராகவும் அறியப்பட்டார். ‘Uncle Percy’ என்றே கிரிக்கெட் ரசிகர்கள் இவரை அழைத்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 87 ஆவது பிறந்தநாளை இவர் கொண்டாடி இருந்ததுடன், அண்மைக் காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலேயே இன்று காலமானார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை 5 மில்லியன் ரூபாவை பெர்சி அபேசேகரவின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு வழங்கியிருந்தது.

பெர்சி அபேசேகர 1979 உலகக் கிண்ணத்தில் இருந்து இலங்கை அணிக்கு ஆதரவாக சர்வதேச போட்டிகளில் இலங்கைக் கொடியை உயர்த்தியவராவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் குறித்து அரவது குடும்பத்தார் நாளைய தினம் அறிவிக்க உள்ளனர்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...