ஈஸ்டர் தாக்குதல்: இலங்கை கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு கடிதம்!

Date:

இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முன்னைய விசாரணைகளில் காணக்கூடிய சில குறைபாடுகளை களைவதற்காக உள்ளுர் விசாரணைக்கு அந்த கடிதத்தின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான, நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர்களான கர்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட பல ஆயர்கள் கையெழுத்திட்ட இந்த கடிதத்தில், முந்தைய விசாரணைகளில் முக்கியமான பிரச்சினைகளை புறக்கணித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு இயக்குநரகம் மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியவை சஹ்ரானுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தன என்பது தெளிவாகிறது.

இந்த விசாரணைகளைத் தடுக்கவும் சூழ்ச்சிகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை ‘செனல் 4’ காணொளியில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் இலங்கை கத்தோலிக்க திருச்சபை குழு கோரியுள்ளது.

இந்த விசாரணையை வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த குழு வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...