ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு பிரேரணை முன்வைப்பு

Date:

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் ‘செனல் 4’ வெளியிட்ட ஆவணப்படம் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொடவினால் இந்த பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பல்வேறு குழுக்களின் விசாரணைகளின் பின்னரும் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 101 இன் விதிமுறைகளுக்கு அமைய 11 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சபாநாயகரினால் நியமிக்கப்பட வேண்டுமெனவும் முன்மொழியப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரையும் குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பதற்கும், எந்தவொரு நபர் மற்றும் ஆவணம் அல்லது பதிவேட்டினை பெறுவதற்கும் அத்தகைய ஆதாரங்களை எழுத்துப்பூர்வமாக அல்லது வாய்மூலமாக பெறுவதற்கும் குறித்த குழுவிற்கு அனுமதி வழங்கும் வகையில் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முழுமையாக பரிசீலிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த விசேட குழுவின் முதலாவது கூட்டத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அல்லது பாராளுமன்றம் வழங்கக்கூடிய காலப்பகுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பபடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...