உடல் உறுப்பு மாற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துக்கு தட்டுப்பாடு

Date:

உடல் உறுப்பு மாற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் Basilixinab மருந்து பற்றாக்குறையால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் தடைபடுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதனைத்தவிர, நாய்க்கடிக்கு உள்ளாகும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் இரண்டு வகையான தடுப்பூசிகளில் ஒன்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதன் காரணமாக குறித்த நோயாளர்களும் சிரமங்களை எதிர்நோக்குவதாக சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

” மாற்று உறுப்புகள் நிராகரிக்கப்படுவதை தடுக்க நோயாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசியான Basilixinab மருந்து காலதாமதமானதால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட உறுப்பு மாற்று சிகிச்சைக்கு வருகை தரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, குறித்த மருந்தை வெளியிலிருந்து கொள்வனவு செய்வதெனில் சுமார் மூன்று இலட்சம் ரூபாய் செலவாகும்.

இந்நிலையில் , அம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரத்திலிருந்து உறுப்பு மாற்று சிகிச்சைக்கு வருகைத் தரும் நோயாளர்களுக்கு இத்தொகையை செலுத்தி வெளியிலிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வது மிகவும் சிரமமாக உள்ளது.

இத்தகைய காரணங்களால் சுகாதார அமைச்சர் உடனடியாக இவ்விடயத்தில் கவனம் செலுத்தி Basilixinab மருந்து தட்டுப்பாடு மற்றும் நாய்க்கடி தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கான தீர்வை உடனடியாக வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...