உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: வர்த்தக அமைச்சர்

Date:

அடுத்த வருடம் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு அரிசி கையிருப்பை பராமரிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே கோழி இறைச்சியின் விலையை குறைக்கும் அரசின் முயற்சி தோல்வியடைந்து வருகிறது. கோழிப்பண்ணை உற்பத்தி நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய முடிவுகள் கிடைக்காததே அதற்குக் காரணம்.

பாரியளவிலான கோழி உற்பத்தி நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சந்தையில் பொருட்களின் விலைகள் போதியளவு குறைவடையவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...