சட்டக்கல்லூரி பரீட்சையில் விடைத்தாள்களை மறைத்து வைத்து விடைகளை எழுதிய பாராளுமன்ற உறுப்பினர்!

Date:

அகில இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் தென் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விடைத்தாள்களை மறைத்து வைத்து விடைகளை எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு கடுமையான நிபந்தனைகளின் கீழ் தேர்வுத் துறையால் நடத்தப்படுகிறது.

அதன்படி, சட்டங்கள் தொடர்பிலான பாடப் புத்தகங்களை அருகில் அடுக்கி வைத்து பரீட்சைக்கான பதில்களை எழுதியதாக தகவல் வெளியானதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த பாராளுமன்ற உறுப்பினர் உயர்மட்ட அரசியல்வாதிகளின் பின்னால் செல்வதன் மூலம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தவிர்க்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவுக்கு தொடர்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: இணையம்

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...