சட்டக்கல்லூரி பரீட்சையில் விடைத்தாள்களை மறைத்து வைத்து விடைகளை எழுதிய பாராளுமன்ற உறுப்பினர்!

Date:

அகில இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் தென் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விடைத்தாள்களை மறைத்து வைத்து விடைகளை எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு கடுமையான நிபந்தனைகளின் கீழ் தேர்வுத் துறையால் நடத்தப்படுகிறது.

அதன்படி, சட்டங்கள் தொடர்பிலான பாடப் புத்தகங்களை அருகில் அடுக்கி வைத்து பரீட்சைக்கான பதில்களை எழுதியதாக தகவல் வெளியானதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த பாராளுமன்ற உறுப்பினர் உயர்மட்ட அரசியல்வாதிகளின் பின்னால் செல்வதன் மூலம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தவிர்க்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவுக்கு தொடர்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: இணையம்

Popular

More like this
Related

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....