சரத் பொன்சேகாவை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம்?

Date:

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இறுதி முடிவை எடுக்கவில்லை, ஆனால் அவர் நிச்சயமாக கட்சி நலன்களுக்கு எதிராக செயற்படுகிறார்.

இது மோசமானது. சில ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், ஆனால் அது எந்த முடிவையும் தரவில்லை. அவர் யாருடைய பேச்சையும் கேட்பதாக தெரியவில்லை.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேட்புமனுவை ஆதரிக்க விரும்பவில்லை என அண்மையில் தம்மைச் சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் பொன்சேகா கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் செயலாளர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க ஆர்வமுள்ள தரப்பினரால் சில கதைகள் விதைக்கப்படுகின்றன,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...