நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தினால் சர்வதேச நீர் மாநாட்டின் மதிய உணவுக்காக 9.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, 1,350 பேருக்கு இந்த தொகை செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், 100 பேருக்கு மதிய உணவு வழங்குவதற்கு 4.4 மில்லியன் ரூபாவை செலவிடுமாறே உலக வங்கி அனுமதி வழங்கியிருந்தது.
திறைசேரிக்கு எவ்வித மேலதிக செலவும் இன்றி சர்வதேச நீர் மாநாட்டை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சரவை அங்கீகாரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், இந்த தொகை திறைசேரிக்கு சுமையாக மாறியது.
எவ்வாறாயினும், கடன் பெறுமதியில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.