சர்வதேச விசாரணைக்கு இடமில்லை; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி

Date:

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட எந்தவொரு விடயம் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் Deutsche Welle ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய ஊடகமான செனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நீதிபதி, முன்னாள் விமானப்படை தளபதி மற்றும் பிரபல சட்டத்தரணி ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த குழுவின் பலம் தொடர்பில் சந்தேகம் எழுப்பியதுடன், இலங்கை கத்தோலிக்க திருச்சபை சுயாதீன விசாரணை கோருவது குறித்து ஊடகவியலாளர் வினவியபோது ஜனாதிபதி அவரை வசைபாடியதுடன், இந்த கேள்வியினை என்னிடம் கேட்பதற்கு நீங்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், மேற்குலக நாடுகள் இலங்கையை மூன்றாம் தர நாடு போன்று கருதுவதாகவும், அந்த அடிப்படையிலே ஊடகவியலாளர் கேள்வி எழுப்புவதாகவும் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே, Deutsche Welle ஊடகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் இடையூறு விளைவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேர்காணலில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவித்ததனையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்தை அறிக்கையை தமது அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி ரணில்  தெரிவித்துள்ளார்

அத்துடன், இலங்கையில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

மூலம்: ஒருவன்

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம்...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...