சீரற்ற காலநிலையால் வத்தளை பிரதேச மக்கள் பாதிப்பு!

Date:

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்தின் உஸ்வட்டகெய்யாவ, குறிஞ்சிவத்தை போன்ற தாழ்நில பிரதேசங்கள் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் சுமார் 3,000 குடும்பங்களில் 8,000 ற்கும் மேற்பட்ட மக்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். இதில் 2,100 மேற்பட்ட மாணவர்களும் அடங்குவர்.

தொடரும் மழை வீழ்ச்சி காரணமாக இப்பகுதிகளில் சுமார் 2 அடி தொடக்கம் 4 அடி வரையில் நீர்மட்டம் தேங்கியுள்ள நிலையில் வடிகால்கள் இல்லாமையால் இந்நீர் மட்டமானது உயரும் அபாயத்திலுள்ளது.

இதனால் நிர்க்கதியாகியுள்ள மக்களில் சிலர் பாடசாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளதோடு, பலர் தஞ்சமடைய இடமில்லாது வெள்ள நீரில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், சில தொண்டு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் உணவுப் பொதிகள் மற்றும் உலர் உணவுகளையும் வழங்கிவரும் நிலையில் இவை போதுமான நிவாரணமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...