சீரற்ற காலநிலையால் வத்தளை பிரதேச மக்கள் பாதிப்பு!

Date:

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்தின் உஸ்வட்டகெய்யாவ, குறிஞ்சிவத்தை போன்ற தாழ்நில பிரதேசங்கள் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் சுமார் 3,000 குடும்பங்களில் 8,000 ற்கும் மேற்பட்ட மக்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். இதில் 2,100 மேற்பட்ட மாணவர்களும் அடங்குவர்.

தொடரும் மழை வீழ்ச்சி காரணமாக இப்பகுதிகளில் சுமார் 2 அடி தொடக்கம் 4 அடி வரையில் நீர்மட்டம் தேங்கியுள்ள நிலையில் வடிகால்கள் இல்லாமையால் இந்நீர் மட்டமானது உயரும் அபாயத்திலுள்ளது.

இதனால் நிர்க்கதியாகியுள்ள மக்களில் சிலர் பாடசாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளதோடு, பலர் தஞ்சமடைய இடமில்லாது வெள்ள நீரில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், சில தொண்டு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் உணவுப் பொதிகள் மற்றும் உலர் உணவுகளையும் வழங்கிவரும் நிலையில் இவை போதுமான நிவாரணமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...