டயானா தாக்கப்பட்டமை தொடர்பில் CCTV காணொளிகளை அடிப்படையாக வைத்து விசாரணைகள்!

Date:

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்ஜய பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு நாளை மறுதினம் கூடவுள்ளது.

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் குறித்த குழு கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்போது, சம்பவம் இடம்பெற்ற இடத்திலுள்ள CCTV காணொளிகளை மையமாக கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திலுள்ள வாசிகசாலைக்கு அருகில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்ஜய பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கிடையே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...