மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்!

Date:

இலங்கை மின்சார சபையை  மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சபை பாரிய நட்டத்தில் இயங்குவதாக கடந்தகாலத்தில் பல தரப்பால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அதனை மறுசீரமைப்பதற்கான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

மின்சார சபையை எதிர்கொண்டுள்ள நஷ்டத்தை குறைக்கவும் மின்சார சபையின் இலாபத்தை அதிகரிக்கவும் மின் கட்டணம் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டன.

இவ்வாறான பின்புலத்திலேயே மின்சார சபையை மறுசீரமைப்புக்கும் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அடுத்தவாரம் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அவற்றை சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...