நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள் தாக்கல்:சபாநாயகர்

Date:

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இதுவரை 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை தெரிவித்தார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் கடந்த 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த சட்டமூலமானது நாட்டின் சில அறிக்கைகளில் தகவல் தொடர்புகளைத் தடைசெய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது என விமர்சம் முன்வைக்கப்பட்டது.

அத்துடன், இந்த சட்டமூலம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை தெரிவித்தன.

இந்த நிலையிலே, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, சோசலிச இளைஞர் சங்கம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்திம பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பல ஊடகவியலாளர்களினால் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டன.

இதனிடையே, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அமுல்படுத்தப்படும் நிலையில் இலங்கை பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...