பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Date:

பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் கொள்வனவு செய்ய 3000 ரூபாய் மதிப்புள்ள வவுச்சர்கள் ஏறக்குறைய 800,000 பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக பாதிப்பிற்கு உள்ளான மாணவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வவுச்சர்கள் விநியோகிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் அறிக்கை ஒன்றில் அமைச்சர் குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கு காலணிகள் கொள்வனவு செய்ய அடுத்த வருடம் (2024) இது மேலும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த வருடம் முதல் பாடசாலை அமைப்பில் பல மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...