பாலஸ்தீன தூதுவருடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தூதுக்குழு சந்திப்பு!

Date:

காஸாவில் தொடரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்களுடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஜமாஅத்தின் தூதுக் குழுவொன்று அதன் பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளியன்று (27) இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் டாக்டர் சுஹைர் எம்.எச். தர் ஸைட். அவர்களை தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியது.

இதன்போது காஸா மற்றும் மேற்குக் கரையின் தற்போதைய நிலைமை குறித்து தூதுக் குழுவினருடன் கலந்துரையாடிய தூதுவர், இந்த சோகத்தின் போது பாலஸ்தீன மக்களுடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒருமைப்பாட்டுக்காக நன்றி தெரிவித்தார்.

மேலும், இலங்கை மக்கள் பாலஸ்தீனத்தில் நீதிக்காக தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதையும் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீன மக்களுடனான அவர்களது ஒருமைப்பாட்டையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இதன்போது தூதுக்குழுவினர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் நகலை தூதுவரிடத்தில் கையளித்தனர்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...