பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு

Date:

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பேருந்து  ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய்  வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை வீதியின் இருபுறமும் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி,   சுற்றாடல் அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தொடர்புபட்ட உள்ளுராட்சி அதிகாரிகளுடன் இணைந்து வீதியோரங்களில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள பெரிய மரங்களை உடனடியாக ஆய்வு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மழையுடனான காலநிலை மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய அனைத்தையும் அகற்றுமாறும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை கொள்ளுப்பிட்டியில் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் பதிலளித்த இராஜாங்க அமைச்சர், சேதங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

வீதியின் இருபுறங்களிலும் முறிந்து விழும் ஆபத்துள்ள மரங்களை அகற்றுமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...