பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன்காரணமாக இன்று பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது.

மட்டக்களப்பில் மாடு வளர்ப்பதற்காக மக்கள் பயன்படுத்திய காணிகளை வெளியாட்கள் சிலர் அபகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு சபையின் மத்தியில் பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையிலான எம்.பி.க்கள் குழு “அடிக்காதே, அடிக்காதே, எங்கள் நிலத்தை எங்களுக்கு கொடு, எங்களைத் தாக்குவதை நிறுத்துங்கள், எங்கள் நிலங்களை எங்களிடம் திருப்பி கொடுங்கள் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பார் என அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த அறிவித்ததையடுத்து கூட்டமைப்பு எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...