மறைந்த பிரபல நடிகர் ஜாக்சன் அண்டனியின் மாபெரும் கலைஞரின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.
அதன்படி, இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ராகம புனித Peter And Paul தேவாலயத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமரர் ஜாக்சன் அண்டனிஉயிரிழக்கும் போது அவருக்கு 65 வயது. இலங்கை சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவராக திகழ்ந்த இவர் ஒரு நடிகராக , தயாரிப்பாளராக , பாடகராக , அறிவிப்பாளராக அதுமட்டுமன்றி ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்தார்.