வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Date:

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி டி.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலுக்கு நீதியை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஹர்த்தாலுக்கு  தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கப்பட்டுள்ளதுடன் இங்கு முழுமையான கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கு வகையில் சில பிரதேசங்களில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் போக்குவரத்து, வைத்தியசாலை சேவைகளை மற்றும் சில அரச சேவைகள் தவிர ஏனைய சேவைகள் முற்றாக முடங்கியுள்ளன. என்றாலும் நீதிமன்ற சேவைகள் முற்றாக முடங்கியுள்ளன.

வடமாகாணத்தில் ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டுள்ள போதிலும்  கல்விச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

கொக்குத்தொடுவாயில் மனித புதைக்குழி தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்டுவந்த முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி டி.சரவணராஜாவுக்கு வழக்கின் தீர்ப்புகளை மாற்றியமைக்குமாறு அரச தரப்பால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் கூறியதுடன், நீதிசேவை ஆணைக்குழுவுக்கு விடுமுறை கடிதமொன்றை வழங்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

நீதிபதி டி.சரவணராஜாவுக்கு நீதியை வேண்டி கடந்த சில நாட்களாக நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவந்ததுடன், இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்டுமாறு ஐ.நா. உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் குரல் கொடுத்திருந்தன.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...