ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் அமைச்சர் நிமல் விடுத்துள்ள அறிவிப்பு

Date:

சரியான நேரத்தில் புறப்பட முடியவில்லை என்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானங்களை புறக்கணிக்க வேண்டாம் என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல விமானங்கள் தாமதமாக புறப்படுவதால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவதால், பயணிகளை மாற்று விமானங்களை பயன்படுத்துமாறு கூற வேண்டிய நிலை ஏற்படும். விமான தாமதம் குறித்து அதிகாரிகளும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

எவ்வாறாயினும், சில அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான விமானங்கள் தாமதமாகவே புறப்படுகின்றன. இதற்கான உரிய காரணத்தை விமான நிறுவனம் வெளியிடவில்லை.

என்றாலும், உரிய நேரத்துக்கு செல்ல முடியாது பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...