10 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கும் இஸ்தான்புல்லுக்கும் இடையில் நேரடி விமான சேவை

Date:

10 வருடங்களுக்குப் பின்னர் துருக்கி ஏர்லைன்ஸ் இலங்கைக்கும் இஸ்தான்புல்லுக்கும் இடையில் நேரடி விமான சேவையை இன்று ஆரம்பித்துள்ளதாக ஏர்போர்ட் மற்றும் ஏவியேஷன் சர்வீசஸ் (இலங்கை) பிரைவேட் லிமிடெட்  தெரிவித்துள்ளது.

அதன்படி இரு நாடுகளுக்கும் இடையே வாரத்திற்கு நான்கு விமானங்கள் இயக்கப்படும்.

தொடக்க நேரடி விமானம் (TK 730) 261 பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அதிகாலை 5.41 மணிக்கு தரையிறங்கியது.

இந்த சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில், முதல் நேரடி விமானம் ஏவியேஷன் சர்வீசஸ்சால் ஏற்பாடு செய்யப்பட்ட நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது.

குறித்த விமானத்தில் வந்த பயணிகளுக்கு இலங்கை தேயிலை சபையின் அனுசரணையுடன் உலகின் தலைசிறந்த தேயிலைக்கு இணையான சிலோன் தேநீர் பரிசுப் பொதிகள் (Ceylon Tea) வழங்கப்பட்டன.

தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு நிகழ்வையும் ஏவியேஷன் சர்வீசஸ் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, ஏவியேஷன் சர்வீசஸ்சின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ. சந்திரசிறி,

இந்த நேரடி விமானச் செயற்பாடுகளின் ஆரம்பமானது எதிர்காலத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறையை பாரியளவில் மேம்படுத்தும் என்றும், துருக்கிய விமான சேவைகளுடன் ஐரோப்பிய இடங்களை இணைக்க இந்த இணைப்பு முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...