128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க பரிந்துரை!

Date:

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதன்முதலாக 1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட்  விளையாடப்பட்டது.

அதன் பின்னர் 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டுடன் சேர்த்து பேஸ்பால்/சாஃப்ட்பால் (Softball), ஃபிளாக் ஃபுட்பால் (Flag Football), லெக்ராஸ், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மும்பையில் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட புதிய விளையாட்டுகளைச் சேர்ப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் இருபதுக்கு இருபது ஆட்டமாக நடத்த முடியும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...