9 மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் 23,000 முறைப்பாடுகள்: பெண்களிடமிருந்தே அதிகம்!

Date:

இவ்வாண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் பேஸ்புக் தொடர்பான 23,534 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவற்றில் 70 வீதமானவை பெண்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

” வேலை வழங்குவதாக கூறி இணையத்தில் செய்யும் மோசடிகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கு அடுத்தபடியாக இணையத்தில் செய்யப்படும் பிரமிட் மோசடிகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும், போலி ஃபேஸ்புக் கணக்குகளை உருவாக்கி, ஃபேஸ்புக் கணக்குகளை ஹேக் செய்வதாகவும் புகார்கள் உள்ளன.

இவற்றில் கடந்த மே மாதத்தில் 3328  பேஸ்புக் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளை 101 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக்கொண்டு தெரிவிக்க முடியும்.” எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...