9 மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் 23,000 முறைப்பாடுகள்: பெண்களிடமிருந்தே அதிகம்!

Date:

இவ்வாண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் பேஸ்புக் தொடர்பான 23,534 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவற்றில் 70 வீதமானவை பெண்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

” வேலை வழங்குவதாக கூறி இணையத்தில் செய்யும் மோசடிகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கு அடுத்தபடியாக இணையத்தில் செய்யப்படும் பிரமிட் மோசடிகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும், போலி ஃபேஸ்புக் கணக்குகளை உருவாக்கி, ஃபேஸ்புக் கணக்குகளை ஹேக் செய்வதாகவும் புகார்கள் உள்ளன.

இவற்றில் கடந்த மே மாதத்தில் 3328  பேஸ்புக் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளை 101 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக்கொண்டு தெரிவிக்க முடியும்.” எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...

‘இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH இல்.

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில்...