இஸ்ரேலில் காயமடைந்த இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்!

Date:

இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது காயமடைந்த இலங்கை பிரஜை, சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு அந்த நாட்டிலிருந்து எந்தவித நட்டஈடும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் சுற்றுலா விசாவில் ஜோர்தானுக்குச் சென்றதாகவும், அதன் பின்னர் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்கு சென்று பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இரண்டு இலங்கைப் பெண்கள் இஸ்ரேல் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார நேற்று தெரிவித்தார்.

எனவே யுத்த சூழ்நிலையில் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் வருவதை தவிர்க்குமாறு இலங்கை தூதுவர் நிமல் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...