சட்டக்கல்லூரி பரீட்சையில் விடைத்தாள்களை மறைத்து வைத்து விடைகளை எழுதிய பாராளுமன்ற உறுப்பினர்!

Date:

அகில இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் தென் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விடைத்தாள்களை மறைத்து வைத்து விடைகளை எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு கடுமையான நிபந்தனைகளின் கீழ் தேர்வுத் துறையால் நடத்தப்படுகிறது.

அதன்படி, சட்டங்கள் தொடர்பிலான பாடப் புத்தகங்களை அருகில் அடுக்கி வைத்து பரீட்சைக்கான பதில்களை எழுதியதாக தகவல் வெளியானதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த பாராளுமன்ற உறுப்பினர் உயர்மட்ட அரசியல்வாதிகளின் பின்னால் செல்வதன் மூலம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தவிர்க்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவுக்கு தொடர்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: இணையம்

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...