சர்வதேச நீர் மாநாட்டின் மதிய உணவுக்காக ரூ9.5 மில்லியன் செலவு!

Date:

நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தினால் சர்வதேச நீர் மாநாட்டின் மதிய உணவுக்காக 9.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, 1,350 பேருக்கு இந்த தொகை செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், 100 பேருக்கு மதிய உணவு வழங்குவதற்கு 4.4 மில்லியன் ரூபாவை செலவிடுமாறே உலக வங்கி அனுமதி வழங்கியிருந்தது.

திறைசேரிக்கு எவ்வித மேலதிக செலவும் இன்றி சர்வதேச நீர் மாநாட்டை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சரவை அங்கீகாரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், இந்த தொகை திறைசேரிக்கு சுமையாக மாறியது.

எவ்வாறாயினும், கடன் பெறுமதியில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...