சீனக் கப்பல் இன்று இலங்கையை வந்தடையும்!

Date:

சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல் ‘ஷி யான் 6’ கொழும்பு துறைமுகத்தை இன்று (25) வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை வருவதை முன்னிட்டு, இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்ததுடன், இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சூழல் ஒன்று உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் கப்பலின் வருகைக்கு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தன.

இலங்கை வரும் சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல் ‘ஷி யான் 6’ நாரா நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடும்.

இதற்கமைய ‘ஷி யான் 6’ கப்பல் சுமார் 25 நாட்கள் இலங்கையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...