சீரற்ற காலநிலையால் வத்தளை பிரதேச மக்கள் பாதிப்பு!

Date:

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்தின் உஸ்வட்டகெய்யாவ, குறிஞ்சிவத்தை போன்ற தாழ்நில பிரதேசங்கள் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் சுமார் 3,000 குடும்பங்களில் 8,000 ற்கும் மேற்பட்ட மக்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். இதில் 2,100 மேற்பட்ட மாணவர்களும் அடங்குவர்.

தொடரும் மழை வீழ்ச்சி காரணமாக இப்பகுதிகளில் சுமார் 2 அடி தொடக்கம் 4 அடி வரையில் நீர்மட்டம் தேங்கியுள்ள நிலையில் வடிகால்கள் இல்லாமையால் இந்நீர் மட்டமானது உயரும் அபாயத்திலுள்ளது.

இதனால் நிர்க்கதியாகியுள்ள மக்களில் சிலர் பாடசாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளதோடு, பலர் தஞ்சமடைய இடமில்லாது வெள்ள நீரில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், சில தொண்டு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் உணவுப் பொதிகள் மற்றும் உலர் உணவுகளையும் வழங்கிவரும் நிலையில் இவை போதுமான நிவாரணமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...