தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) காலை 9.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சையில் 337,956 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் காலை 9 மணிக்கு பரீட்சை மண்டபத்திற்கு வருகைத்தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாத்தறை, அக்குரஸ்ஸ மற்றும் முலட்டியான ஆகிய கல்வி வலயங்களில் பிரதேச செயலகங்கள் ஊடாக மாணவர்கள் பரீட்சைக்குத் தொற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...