பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தாதிருக்க தீர்மானம்

Date:

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தாதிருக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என சபாநாயகர் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

சபாநாயகரின் அறிவிப்பத்தை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, குறித்த சட்டமூலத்தினை நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழு அறிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...