பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தையை கண்காணிக்க சுயாதீன அமைப்பு!

Date:

பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகளை மேற்பார்வையிடுவதற்கு ஒரு சுயாதீன அமைப்பை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு சுயாதீனமான அமைப்பொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தை உலகின் பல நாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும், அதேபோன்ற அதிகார சபையை நிறுவ வேண்டியதன் அவசியத்தை இலங்கையும் தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இது தொடர்பான கூட்டுப் பிரேரணையை கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்துள்ளனர்.

இதன்படி, எம்.பி.க்களுக்கான நடத்தை விதிகளை அமைப்பது மற்றும் மேற்பார்வை குழுவை நியமிப்பது தொடர்பான அடிப்படை வரைவு சட்டமூலம் தொடர்பில் சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்களைப் பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சபாநாயகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைக் கருத்திற் கொண்டு சட்ட வரைவைத் தயாரிக்குமாறு சட்ட வரைவு தலைவருக்கு அறிவுறுத்தவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகளை மேற்பார்வையிடுவதற்கு சுயாதீன சபையொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...