இவ்வருடம் நாட்டில் 116 தரமற்ற மருந்துகள் பதிவாகியுள்ளன!

Date:

இவ்வருடம் 116 தரமற்ற மருந்துகள் நாட்டில் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

தரமற்ற மருந்துகளைப் பற்றிய புகாரும், அவற்றை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு மருந்து ஒழுங்குமுறை அதிகாரிகளின் பதில்களும் சில இடங்களில் இரண்டு விதமாக இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

” அதனால், சட்டத்தின் மீதான நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.மருந்து மாஃபியாவின் ஒரு அங்கமாகவே அவர்கள் செயல்படுவதைத் தடுக்க முடியாது.

மருந்து அதிகாரசபையின் கொள்கையை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.போலியான சான்றிதழையும் மற்றொரு புற்றுநோய் தடுப்பூசியையும் காட்சிப்படுத்துங்கள்.

புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரிடுக்ஸிமாப் என்ற தடுப்பூசி, போலியான மருந்து ஆணைய பதிவுக் கடிதம் மூலம் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

போலியான இம்யூனோகுளோபிலினை இறக்குமதி செய்த அதே நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட இந்த மருந்தின் 2200 ஊசி மருந்துகளை சுகாதார அமைச்சு கொள்வனவு செய்துள்ளதுடன், அதில் 2000 இற்கும் அதிகமான தொகை நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ” என தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...