இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் நடாத்தப்படும் இனப் படுகொலைகளுக்கு எதிராக புத்தளம் நகரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்!

Date:

கடந்த ஓக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தெற்கு இஸ்ரேலைத் தாக்கிய பின்னர் தொடங்கிய போருக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக வளர்ந்துள்ளது.

பலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, குறைந்தது 11,500 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் சிறார்களாக உள்ளனர். மேலும் 2,700 பேரைக் காணவில்லை, இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டதாக நம்பப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் காசாவில் பலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையுடன் பேரணி நடத்தினர், இஸ்ரேலிய தாக்குதல்களில் பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழப்பதைக் கண்டித்து உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதற்கமைய பலஸ்தீனத்திலும்,காசாவிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளினால் நடாத்தப்படும் கொடூர இனப் படுகொலைகளுக்கு எதிராக இன்று (17) புத்தளம் நகரில் கண்டன ஆர்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

இவ் கண்டன ஆர்ப்பாட்ட பேரணிக்கு பெருந்திரளான புத்தளம் நகர மக்கள் கலந்து கொண்டதோடு இஸ்ரேலின் இந்த படுகொலைகளுக்கு தமது கண்டனத்தையும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து புத்தளம் வாழ் பொது மக்களினால் கண்டன அறிக்கையொன்றும் வாசிக்கப்பட்டது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...