ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இடையே விசேட கலந்துரையாடல் இன்று!

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (27) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய அதிகாரிகள் சபையுடன் அமுல்படுத்தப்படவுள்ளது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்த புதிய நிர்வாக சபையும் தீர்க்கமான காரணியாக இருப்பதன் காரணமாக அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலுக்கான பாரிய பொறுப்பு இந்த அதிகாரி சபைக்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இன்றைய கலந்துரையாடல் முக்கியமான கலந்துரையாடலாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...