சந்தையில் சீனி விலை அதிகரிப்பு!

Date:

சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அத்துடன், சில விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் சீனியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் தற்போது வெள்ளை சீனி கிலோ ஒன்று 320 முதல் 350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அத்துடன், சில விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் சீனியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் தற்போது வெள்ளை சீனி கிலோ ஒன்று 320 முதல் 350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி மேலும் அதிகரிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, 25 ரூபாவாக காணப்பட்ட இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விசேட பண்ட வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

வரி அதிகரிப்புக்குப் பின்னர் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகாரசபயினால் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதன்படி, பொதி செய்யப்படாத வெள்ளை சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 295 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன், பொதி செய்யப்படாத சிவப்பு சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 330 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 350 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இருப்பினும், சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டதையடுத்து, சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளதுடன், சீனிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிகின்றனர்.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...