தரமற்ற தடுப்பூசி மோசடி தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நால்வர் கைது

Date:

இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தரமற்ற தடுப்பூசி மோசடி தொடர்பில் அரசாங்க மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் மருந்தாளுநர் ஆகியோரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, மருத்துவ வழங்கல் துறை அதிகாரிகள் குழு ஒன்று நிறுவனத்தை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தரமற்ற தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஏற்கனவே பொலிஸ் காவலில் உள்ள நிலையில், சுகாதார அமைச்சின் பல உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் அரசியல் அதிகாரம் உள்ள ஒருவர் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கொடுக்கல் வாங்கலுக்கு பெயர் சூட்டப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரின் பதவிக்காலம் கடந்த 18ஆம் திகதியுடன் முடிவடைந்தது. மேலும் அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...