தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Date:

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிகழ்நிலை முறையில், குறித்த விண்ணப்பங்களை அதிபர் ஊடாக அனுப்பி வைக்குமாறும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

www.doenets.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு சிறிது நேரத்தில் அனைத்து மாவட்டங்களுக்குமான தமிழ் மற்றும் சிங்களம் மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டன.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான தமிழ் மொழி மூலமான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி 147 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மாவட்டங்களுக்கான சிங்கள மொழிமூல அதிகூடிய வெட்டுப் புள்ளியாக 154 பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...