மாலைத்தீவு ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹை நேற்று வியாழக்கிழமை (16)  மாலைத்தீவு ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் பொருளாதார நிலையில் இருந்து இலங்கை எவ்வாறு படிப்படியாக மீள்கிறது என்பது குறித்து இருவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மாலைத்தீவு ஜனாதிபதியும் ஆராய்ந்துள்ளனர்.

தனது நிர்வாகத்தின் கீழ் பல இருதரப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒத்துழைத்தமைக்காக ஜனாதிபதிக்கு மாலைத்தீவு ஜனாதிபதி நன்றிகளை தெரிவித்தார்.

இலங்கைக்கு மாலைத்தீவு வழங்கிய உதவிகள் மற்றும் ஆதரவுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக முகமது மூயிஸ் பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...