வெளிநாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற பாராளுமன்ற எம்.பிக்களுக்கு நிதி?

Date:

வெளிநாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் ரூ. ஒரு கோடி  91 இலட்சத்துக்கும் அதிக பணம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய தணிக்கை அலுவலகம் நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

முன்னாள் இரத்தினபுரி மாவட்ட சபை உறுப்பினர் ரஞ்சித் சொய்சா மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்பட்ட ஜயந்த வீரசிங்க ஆகியோருக்கு இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமான நிலையில் அவருக்காக செலுத்தப்பட்ட தொகை ஒரு கோடியே 21 இலட்சத்து 60,000 ரூபாய் ஆகும்.

கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் இரண்டு தவணையாக இந்தத் தொகை செலுத்தப்பட்டது.

ஜயந்த வீரசிங்க அமைச்சருக்கு வழங்கப்பட்ட தொகை 69 இலட்சத்து 55,000ரூபாய் ஆகும்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு, இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய், மூளை தொடர்பான நோய்கள், முழங்கால் மற்றும் இடுப்பு தொடர்பான நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் இதர சிகிச்சைகளுக்கு 5,101 நோயாளிகள் வைத்திய உதவி கோரிய நிலையில் 2750 நோயாளிகளுக்கு மட்டுமே பணம் வழங்கப்பட்டதாக தேசிய தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது 54 வீதம் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இது தொடர்பாக தேசிய தணிக்கை அலுவலகம் நடத்திய விசாரணைக்கு நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...