தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Date:

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிகழ்நிலை முறையில், குறித்த விண்ணப்பங்களை அதிபர் ஊடாக அனுப்பி வைக்குமாறும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

www.doenets.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு சிறிது நேரத்தில் அனைத்து மாவட்டங்களுக்குமான தமிழ் மற்றும் சிங்களம் மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டன.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான தமிழ் மொழி மூலமான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி 147 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மாவட்டங்களுக்கான சிங்கள மொழிமூல அதிகூடிய வெட்டுப் புள்ளியாக 154 பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...