‘வெட்டிக் கொல்வேன்’ என மஹிந்தவின் வீட்டுக்கு முன்னால் வந்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

Date:

 கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக கூச்சலிட்டு கலவரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக வந்த இவர், ஒருவார காலத்துக்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தேடி கண்டுப்பிடிக்க முடியாத வகையில் கொலை செய்து விடுவேன் என கூச்சலிட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கூச்சலிட்டதைக் கண்டு அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குருந்துவத்தை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கிரிதிவெல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...