‘வெட்டிக் கொல்வேன்’ என மஹிந்தவின் வீட்டுக்கு முன்னால் வந்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

Date:

 கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக கூச்சலிட்டு கலவரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக வந்த இவர், ஒருவார காலத்துக்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தேடி கண்டுப்பிடிக்க முடியாத வகையில் கொலை செய்து விடுவேன் என கூச்சலிட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கூச்சலிட்டதைக் கண்டு அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குருந்துவத்தை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கிரிதிவெல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...