அரசியலமைப்பு பேரவை தொடர்பில் சர்ச்சை கருத்து: சஜித்தின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் சபாநாயகர்

Date:

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பேரவைத் தலைவர் என்ற முறையில் தாம் அதைச் செய்வதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் தாமதங்கள் குறித்து ஆராய ஒரு தெரிவுக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

“நான் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதி, அவரது கருத்து குறித்து அரசியலமைப்பு பேரவையின் நிலைப்பாட்டை விளக்குவேன்.” என்றும் சபாநாயகர் வலியுறுத்தினார்.

அத்துடன், பொலிஸ்மா அதிபர் மற்றும் இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களின் அங்கீகாரம் தொடர்பான விடயங்கள் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் உறுதியளித்தார்.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...