அரசியலமைப்பு பேரவை தொடர்பில் சர்ச்சை கருத்து: சஜித்தின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் சபாநாயகர்

Date:

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பேரவைத் தலைவர் என்ற முறையில் தாம் அதைச் செய்வதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவையின் தாமதங்கள் குறித்து ஆராய ஒரு தெரிவுக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

“நான் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதி, அவரது கருத்து குறித்து அரசியலமைப்பு பேரவையின் நிலைப்பாட்டை விளக்குவேன்.” என்றும் சபாநாயகர் வலியுறுத்தினார்.

அத்துடன், பொலிஸ்மா அதிபர் மற்றும் இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களின் அங்கீகாரம் தொடர்பான விடயங்கள் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் உறுதியளித்தார்.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...