அரபு எழுத்தணிக் கலை மேம்பாட்டுக்காக, அரபு எழுத்தணிக் கலை சங்கத்தினால் நடாத்தப்பட்ட இரு நாள் வதிவிட பயிற்சி நெறி!

Date:

முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளின் முக்கிய இடம் வகிக்கின்ற அரபு எழுத்தணிக்கலை சமூகத்தில் இருந்து மறைந்து போயிருந்த சூழ்நிலையில் இக்கலையை மீண்டும் புத்துயிர் ஊட்டி அதன் மூலம் முஸ்லிம்களின் பாரம்பரியத்தையும் கலை உணர்வையும் புத்துயிரூட்டும் ஒரு சிறப்பான பணியில் இலங்கை அரபு எழுத்தணிக் கலை சங்கம் ஈடுபட்டு வருகின்றது.

அதற்கமைய, இலங்கை அரபு எழுத்தணி சங்கம், 20 அரபு எழுத்தணி கலை ஆர்வலர்களுக்கு 2 நாள் வதிவிடப் பயிற்சிநெறியை கடந்த  18-19 ஆம் திகதிகளில் இரத்மலானை பள்ளிவாசலில் மற்றும் NEST அகடமியில் நடாத்தியது.

இந்த பயிற்சி நெறியை அங்கீகரிக்கப்பட்ட அரபு எழுத்தணி கலைஞரான உஸ்தாஸ் ஜே.எம்.உவைஸ் நடத்தினார்.

அரபு எழுத்துக்களை இலங்கையில் மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘அரபு எழுத்தணி சங்கம்’ 2017 இல் கலை ஆர்வலர்களால் ஸ்தாபிக்கப்பட்டது.

சர்வதேச ரீதியில் போற்றப்படும் அரபு  எழுத்துக்களை இலங்கையில் மேம்படுத்துவதே இந்த பயிற்சி நெறியின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.

அதற்கமைய முதன் முதலாக 2018ஆம் ஆண்டு டிசம்பரிலும் இரண்டாவது பயிற்சி நெறி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் சீனாவைச் சேர்ந்த ஹாஜி நூர்தீன் உஸ்தாஸ் பந்தர் மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த இரண்டு கல்வியாளர்கள் இலங்கைக்கு வருகைத் தந்து நடத்தினார்கள்.

இதேவேளை இலங்கை அரபு எழுத்தணி சங்கம் டிசம்பர் 2024 இல் ஒரு கண்காட்சியொன்றையும் ஏற்பாடு செய்யவுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...