அரபு எழுத்தணிக் கலை மேம்பாட்டுக்காக, அரபு எழுத்தணிக் கலை சங்கத்தினால் நடாத்தப்பட்ட இரு நாள் வதிவிட பயிற்சி நெறி!

Date:

முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளின் முக்கிய இடம் வகிக்கின்ற அரபு எழுத்தணிக்கலை சமூகத்தில் இருந்து மறைந்து போயிருந்த சூழ்நிலையில் இக்கலையை மீண்டும் புத்துயிர் ஊட்டி அதன் மூலம் முஸ்லிம்களின் பாரம்பரியத்தையும் கலை உணர்வையும் புத்துயிரூட்டும் ஒரு சிறப்பான பணியில் இலங்கை அரபு எழுத்தணிக் கலை சங்கம் ஈடுபட்டு வருகின்றது.

அதற்கமைய, இலங்கை அரபு எழுத்தணி சங்கம், 20 அரபு எழுத்தணி கலை ஆர்வலர்களுக்கு 2 நாள் வதிவிடப் பயிற்சிநெறியை கடந்த  18-19 ஆம் திகதிகளில் இரத்மலானை பள்ளிவாசலில் மற்றும் NEST அகடமியில் நடாத்தியது.

இந்த பயிற்சி நெறியை அங்கீகரிக்கப்பட்ட அரபு எழுத்தணி கலைஞரான உஸ்தாஸ் ஜே.எம்.உவைஸ் நடத்தினார்.

அரபு எழுத்துக்களை இலங்கையில் மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘அரபு எழுத்தணி சங்கம்’ 2017 இல் கலை ஆர்வலர்களால் ஸ்தாபிக்கப்பட்டது.

சர்வதேச ரீதியில் போற்றப்படும் அரபு  எழுத்துக்களை இலங்கையில் மேம்படுத்துவதே இந்த பயிற்சி நெறியின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.

அதற்கமைய முதன் முதலாக 2018ஆம் ஆண்டு டிசம்பரிலும் இரண்டாவது பயிற்சி நெறி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் சீனாவைச் சேர்ந்த ஹாஜி நூர்தீன் உஸ்தாஸ் பந்தர் மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த இரண்டு கல்வியாளர்கள் இலங்கைக்கு வருகைத் தந்து நடத்தினார்கள்.

இதேவேளை இலங்கை அரபு எழுத்தணி சங்கம் டிசம்பர் 2024 இல் ஒரு கண்காட்சியொன்றையும் ஏற்பாடு செய்யவுள்ளது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...