இலங்கைக்கான புதிய தூதுவர்களுடன் பிரதமர் சந்திப்பு!

Date:

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (13) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

உலகின் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கையிடம் உள்ள வாய்ப்புகளை வெளிப்படுத்துமாறும் முதலீடுகள் மற்றும் கூட்டு முயற்சிகளை ஈர்ப்பதற்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டார்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதில் எங்கள் கவனம் உள்ளது. அரசாங்கங்கள், முன்னணி வர்த்தக நிறுவனங்கள், முன்னணி முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறைகளுடன் நீங்கள் தொடர்ந்து தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையை சுற்றுலாத் தலமாக மட்டுமன்றி பிரதானமாக முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான ஒரு கவர்ச்சிகரமான இடமாக ஊக்குவிக்க வேண்டும். ஏனைய நாடுகளுடன் நெருக்கமாக செயற்படுவதன் மூலம் இலங்கை தனது பொருளாதாரத்தை வேகமாக அபிவிருத்தி செய்ய முடியும்.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் புதிய வலையமைப்பை உருவாக்குவதற்கு அந்நாடுகளிலுள்ள இலங்கையர்களின் அமைப்புகள் மற்றும் அந்த நாடுகளில் உள்ள இலங்கையின் முக்கிய நண்பர்களுடனும் இணைந்து செயற்படுமாறு புதிய தூதுவர்களுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (பாகிஸ்தான்), எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன (நேபாளம்), க்ஷேனுகா செனவிரத்ன (இந்தியா), அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன (கியூபா), சத்யஜித் ரொட்ரிகோ (இத்தாலி), மதுரிகா வென்னிங்கர் (எகிப்து), தர்மபால வீரக்கொடி (பங்களாதேஷ்), செனரத் திஸாநாயக்க (சிங்கப்பூர்) மற்றும் சந்தன வீரசேன (பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்) ஆகிய புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் பிரதமரை சந்தித்தனர்.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...