இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகத்துக்கான நுழைவு வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

Date:

வித்யா மாவத்தையில் இருந்து இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கான நுழைவுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக நடாத்த திட்டமிட்டுள்ள போராட்டத்தை தவிர்க்கும் நோக்கிலேயே இவ்வாறு பாதை மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், இராணுவத்தினர், கலகத் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனடிப்படையில், பத்தரமுல்லே சீலரத்ன தேரர், கடிதமொன்றை கையளிப்பதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.

தேரரை முதலில் பொலிஸார் இடைமறித்துள்ளதுடன், பின்னர் கடிதத்தை கையளிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இதேவேளை, ஊழல், மோசடியுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்துடன், பாராளுமன்றத்தில் இன்று விசேட விவாதமொன்று நடாத்தப்பட்டு, மாலை வாக்கெடுப்பு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...