காஸாவில் மனிதாபிமானமாற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனித படுகொலையையும், கொடூர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என கோரிக்கை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 159 க்கு மேற்பட்டோரின் கையெழுத்துடன் தயாரிக்கப்பட்ட மகஜர் இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள ஐ. நா அலுவலகத்தில் கையளிக்கப்பட உள்ளது.
இந்த மகஜரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டதரணி எச்.எம்.எம். ஹரீஸ், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் ஆகியோர் இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள
ஐ. நா அலுவலகத்தில் வைத்து அதிகாரிகளிடம் கையளிக்கவுள்ளனர்.
இந்த மகஜரில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிரிசேன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சி தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கையெழுத்திட்டு