சந்தையில் சீனி விலை அதிகரிப்பு!

Date:

சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அத்துடன், சில விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் சீனியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் தற்போது வெள்ளை சீனி கிலோ ஒன்று 320 முதல் 350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அத்துடன், சில விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் சீனியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் தற்போது வெள்ளை சீனி கிலோ ஒன்று 320 முதல் 350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி மேலும் அதிகரிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, 25 ரூபாவாக காணப்பட்ட இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விசேட பண்ட வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

வரி அதிகரிப்புக்குப் பின்னர் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகாரசபயினால் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதன்படி, பொதி செய்யப்படாத வெள்ளை சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 295 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன், பொதி செய்யப்படாத சிவப்பு சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 330 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 350 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இருப்பினும், சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டதையடுத்து, சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளதுடன், சீனிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிகின்றனர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...