சந்தையில் சீனி விலை அதிகரிப்பு!

Date:

சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அத்துடன், சில விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் சீனியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் தற்போது வெள்ளை சீனி கிலோ ஒன்று 320 முதல் 350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அத்துடன், சில விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் சீனியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் தற்போது வெள்ளை சீனி கிலோ ஒன்று 320 முதல் 350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி மேலும் அதிகரிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, 25 ரூபாவாக காணப்பட்ட இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விசேட பண்ட வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

வரி அதிகரிப்புக்குப் பின்னர் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகாரசபயினால் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதன்படி, பொதி செய்யப்படாத வெள்ளை சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 295 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன், பொதி செய்யப்படாத சிவப்பு சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 330 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 350 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இருப்பினும், சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டதையடுத்து, சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளதுடன், சீனிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிகின்றனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...