சபாநாயகரிடம் மன்னிப்பு கோரினார் சனத் நிஷாந்த

Date:

சபைக்குள் இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமைக்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் அவர் மன்னிப்பு கோரியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த நவம்பர் 21 செவ்வாய்கிழமை பாராளுமன்ற அமர்வின் போது தனது நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்தார். அ

வர் தனது நடத்தை பொருத்தமற்றது என்றும் மதிப்பிற்குரிய சட்டமன்ற அமைப்பில் நடந்திருக்கக்கூடாது என்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி நளின் பண்டார ஆகியோரை எந்தவித தண்டனை நடவடிக்கைகளிலிருந்தும் விடுவித்துள்ள நிலையில், முழு சம்பவத்திற்கும் அவரை மட்டுமே பொறுப்புக்கூற தீர்மானித்தமை, அவரது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகும் என இராஜாங்க அமைச்சர் மேலும் வாதிட்டார்.

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது நிஷாந்த வெளிப்படுத்திய கட்டுக்கடங்காத நடத்தையை முழுமையாக மதிப்பீடு செய்ததை அடுத்து இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...