‘சீன ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரி : ஜோ பைடனின் விமர்சனத்தால் சர்ச்சை

Date:

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று நடைபெற்ற ‘ஏபிஇசி’ (APEC Summit பொருளாதார உச்சி நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர்.

அதன்பின் கலிபோர்னியா சென்ற ஜனாதிபதி ஜின் பிங்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றார். இருவரும் தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் இரு நாட்டு இராணுவ உறவு, ரஷ்யா-உக்ரைன் போர், தைவான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

வர்த்தக போக்குவரத்து, பொருளாதார தடை, அமெரிக்க வான்வெளி பகுதியில் சீன உளவு பலூன் பறந்த விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வரும் சூழ்நிலையில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்தச் சந்திப்புக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், சீன அதிபரை இன்னும் சர்வாதிகாரியாகத்தான் நீங்கள் கருதுகிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன், ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி. சீன அரசாங்கம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்தார்.

நேற்றைய தினம் இருவருக்கும் இடையில் ஆக்கப்பூர்வமான சந்திப்பொன்று நடந்த பின்புலத்தில் ஜனாதிபதி பைடன் வெளியிட்டுள்ள இந்த கருத்து சீனாவை அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. நிச்சயமாக இதற்கு சீனா எதிர்வினையாற்றும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...